வாசிப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தளங்களில் வாசிக்க பிடிக்கும் நம்ம ஏரியா சிறுகதை வாசிப்பது.300 பக்க நாவல் வாசிப்பு என்பது நமக்கு ஆகாத வேலைதான். சிறிய அளவிலான நாவல் ஆளுமைகளைப் பொறுத்து எழுத்து நடையைப் பொறுத்து வாசித்ததுண்டு சிறிய நாவல்களிலும் சில நம்மை சோதித்திருக்கின்றன. முதலில் பிடித்த நாவல்கள் பற்றி 1.அபிதா -லா.சா.ரா நாவலாகட்டும் சிறுகதையாகட்டும் கதையெல்லாம் இவருக்கு இராண்டாம் பட்சம்தான். அழகியல்,நறுக்கு தெரித்தாற்போன்ற வார்த்தைகள் இவைதான் லா.சா.ரா வை வாசிக்க தூண்டுபவை வாடிவாசல்-சி.சு.செல்லப்பா ஒற்றன்-அசோகமித்ரன் மாமிசம் படைப்பு-நாஞ்சில் நாடன் கோபல்ல கிராமம்-கி.ரா
Comments
Post a Comment